Saturday 19 November 2011






I'm not the Poet
to convey My feelings
interestingly...
but...
My heart have the pain
to mourn for our Departure..
I left everything here..
My College.. My Department..
My Students.. My Place.. My things
and everything I left..
But
I took only One.....
the Memories..
those Sweet memories with Me..
 the New Place and the New Job
can enrich my Mind..
but  how can it enrich my Heart ?
We may be  apart..not Departed

(When I left My College., and asked to join its another institution)

Saturday 29 October 2011



உனக்கான என் தேடலில் 
என்னை தொலைத்தேன்..
நீ திரும்பி வரும் நாளுக்காய்
காத்திருந்து என் விழி 
வேர்த்திருந்தேன்..
நீ என்னுடன் இல்லாத நாள்கள்.....
நாள்களா.. அவை....?
ஓவொன்றும் ஒரு யுகம்..
ஒவ்வொரு யுகமும் ஸ்தம்பித்திருந்தேன்..
உண்டேன்.. உறங்கினேன்.. 
சிரித்தேன்.. எல்லம் செய்தேன்.
ஆனால் உயிர்ப்பு இல்லாமல்..
அம்மாவை போல் 
அன்பாய் எழுப்ப 
எந்த அலாரத்திற்கும் தெரியவில்லை,
அவசரமா கிளம்பும்போது ,
"இது மட்டும்.. இது மட்டும்.."
என ஊட்டி விட 
என் கைகளுக்கு தெரியவில்லை..
அங்கொன்றும் இங்கொன்றுமாய்  
சிதறி கிடக்கும் என் செருப்பு கூட
 உணர்கிறது உன் பிரிவை 

(அம்மா ஊருக்கு போயிருந்தப்ப  எழுதியது.. )

Wednesday 26 October 2011



 
நான் விரும்பியபோதெல்லாம் 
எனக்காக கவிதை எழுதி 
விரும்பாதபோதும் 
எனக்காக Notes எழுதி 
கவிதை என்றதும்
என் பெயர் எழுதி 
உன் உயிர் தீரும் வரையில் 
எனக்காகவும்..
சில நேரங்களில்
பிறருக்காகவும் 
ஆறாவது விரலாய்
இணைந்தாய்...
சிலநேரங்களில் உன்னை
தூக்கி எறிந்திருக்கிறேன்
பலநேரங்களில் உன்னை 
அலட்சியப்படுத்திருக்கிறேன்..
இருந்தும் என்னை ஒருபோதும் 
நிராகரித்ததில்லை நீ !!
இப்போது என் PENஆக
வாழும் நீ
அடுத்த ஜென்மத்தில் 
என் பெண்ணாக வா!

Saturday 8 October 2011

                                                                முரண் 

          எனது படிப்போ ஆங்கில இலக்கியம்..
          எனது துடிப்போ தமிழ் இலக்கியம்..
          அந்நிய மொழியை படித்திடலாம்..
           படித்தும் புரிந்தும் ரசித்திடலாம்..
           எனினும்
           நினைப்பதும் யோசிப்பதும் 
          தாய் மொழி மட்டுமே..

Tuesday 27 September 2011

                                      தத்தி தத்தி நடந்து வரும் ஒரு குழந்தையின் நடை போல என் எழுத்துக்கள் இங்கே !!  
                                     பெற்றோருக்கு சமர்பிக்கும் வகையில் ஆழமானதும் அழகானதும் இல்லை !!
                                      இருந்தும் எழுதுகிறேன் !!!!